Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரேயாஸ் ஐயர்தான் என்னைக் காப்பாற்றினார்.. சதத்துக்குப் பிறகு ஷுப்மன் கில் கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயர்தான் என்னைக் காப்பாற்றினார்.. சதத்துக்குப் பிறகு ஷுப்மன் கில் கருத்து!

vinoth

, திங்கள், 5 பிப்ரவரி 2024 (09:31 IST)
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. அதை தொடர்ந்து நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட்டில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி இங்கிலாந்து 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் கில் 4 ரன்கள் சேர்த்திருந்த போது எல்பிடபுள்யு முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். நம்பிக்கையே இல்லாமல் அந்த விக்கெட்டை ரிவ்யூ செய்தார். அதில் பந்து பேட்டில் பட்டு சென்றதால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அதன் பிறகுதான் கில் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கில் “அந்த விக்கெட்டுக்கு அப்பீல் செய்ய நான் நினைக்கவில்லை. ஸ்ரேயாஸ்தான் என்னை அப்பீல் செய்ய சொன்னார். அவர்தான் என்னைக் காப்பாற்றினார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாவது டெஸ்ட்டிலும் கோலி இருக்க மாட்டாரா?