Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து வீசி அவர் கையை உடைக்க சொன்னார்கள்; அக்தர் சொன்ன பகீர் தகவல்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (10:35 IST)
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் தான் விளையாடிய கால அனுபவங்களில் நடந்த பகீர் சம்பவங்கள் குறித்து பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Shoaib Akthar

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், கிரிக்கெட் தொடர்பான செய்திகளை அடிக்கடி தனது யூட்யூப் சேனல் மூலமாக வெளியிட்டு வருகிறார். பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள பாகிஸ்தான் – இந்தியா டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக ஷோயப் அக்தர் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வேறொரு யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த ஷோயப் அக்தர் தனது கிரிக்கெட் கால அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது அவரது வேக பந்து வீச்சை தாங்க முடியாமல் பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் எங்களை கொன்றுவிடாதீர்கள் என்று கெஞ்சியதாகவும் கூறியுள்ளார். இலங்கை அணியுடன் நடந்த போட்டி ஒன்றில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பேட்டிங் செய்தபோது யூசப் யோஹானா அக்தரிடம் “முரளிதரனின் கையை பந்தை வீசி உடைத்துவிடு” என கூறியதாகவும் கூறியுள்ளார். தானும் முரளிதரனுக்கு பவுன்சர்களாக வீசியதாக அக்தர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள்… மிட்செல் ஸ்டார்க் தொட்ட மைல்கல்!

நீ என்ன ஸ்மித்த லவ் பன்றியா?... அஸ்வினைக் கலாய்த்த அவரது மனைவி!

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

பாலிவுட் நடிகையை ‘டேட்’ செய்கிறாரா சிராஜ்?... தீயாய்ப் பரவும் தகவல்!

ஸ்டீவ் ஸ்மித்தான் இந்த தலைமுறையின் சிறந்த டெஸ்ட் வீரரா?... ரிக்கி பாண்டிங் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments