Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும்…” அக்தர் வெளியிட்ட வீடியோ

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:01 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தற்போது கால்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி இதுவரை அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய காலம் முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமலேயே விளையாடினார். கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இப்போது வர்ணனையாளராகவும் விமர்சகராகவும் செயல்பட்டு வரும் தற்போது கால்களில் முட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ கடந்த 11 ஆண்டுகளாகவே நான் கால்களில் வலியுடன் அவதிப்பட்டு வந்தேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருப்பதின் சோகம் இதுதான். நான் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருக்கலாம். ஆனால் நான் விளையாடி இருந்தால் இப்போது சக்கர நாற்காலியில்தான் இருந்திருப்பேன். அதனால் ஓய்வை அறிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments