Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிகார் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது… தினேஷ் கார்த்திக் கருத்து!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (08:45 IST)
இந்திய அணியில் இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தேர்வுக்குழுவுக்கு அதிக வேலைகளை கொடுத்து வருகின்றனர்.

ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரை அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைய சூழல் அதற்கு இடம் கொடுக்காது என்பது போல மாறியுள்ளது.

ஏனென்றால் அவரின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு இஷான் கிஷான், சுப்மன் கில் ஆகிய இரண்டு வீரர்கள் கடுமையான போட்டியாளர்களாக உருவாகி வருகின்றனர். இருவருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இஷான் கிஷானின் சமீபத்தைய இரட்டை சதம் குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக் “"சுவாரஸ்யமாக, ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பும்போது யாராவது ஒருவர் வெளியேற வேண்டும்.  அது தவானாக இருக்கலாம். அவரின் மிகச்சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு சோகமான முடிவாக இது இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments