Publish Date: Wed, 07 Feb 2024 (07:39 IST)
Updated Date: Wed, 07 Feb 2024 (07:41 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் கூட ஆர் சி பி அணி சிறப்பாக விளையாடியும் ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு எப்படியும் ஆர் சி பி அணி கப் அடித்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது. அதற்கேற்றார் போல அடுத்த சீசனில் விளையாட கேமரூன் க்ரீன், அல்ஜாரி ஜோசப் மற்றும் யாஷ் தயால் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தைய சென்சேஷனான வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பை ஆர் சி பி அணி தங்கள் அணிக்காக 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப் பதில் டாம் கரணை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஷமர் ஜோசப் சிறப்பாக பந்துவீசி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.