Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாகின் அப்ரிடிக்குக் கேப்டன் பதவி கொடுத்திருக்கக் கூடாது… மாமனார் ஷாகித் அப்ரிடி கருத்து!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (07:56 IST)
உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் போட்டிகளோடு வெளியேறியது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், தேர்வுக்குழு தலைவர் இன்ஸமாம் உல் ஹக் மற்றும் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் ஆகியோர் பதவி விலகினர்.

அதை தொடர்ந்து பாகிஸ்தான் டி 20 மற்றும் ஒருநாள் அணிக்குக் கேப்டனாக ஷாகீன் அப்ரிடியும், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். இப்போது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் தோற்று பரிதாபகரமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய மருமகனான ஷாகீன் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள ஷாகித் அப்ரிடி “முகமது ரிஸ்வானின் உழைப்பு குறிப்பிடத்தக்கது. அவர் எப்போதும் தன்னுடைய ஆட்டத்தில் கவனமாக இருந்தார். அவர் மிகச்சிறந்த போராளி. பாபர் ஆசாமுக்குப் பிறகு அவருக்குதான் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஷாகீன் அப்ரிடிக்கு தவறுதலாக தரப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments