Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர் கான்பிடன்ஸ் இருந்தா இப்படிதான் நடக்கும்.. இந்திய அணியை விமர்சித்த ஷாகித் அப்ரிடி!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (13:43 IST)
உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டியில் மட்டும் தோற்று இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய ஆஸி அணி 241 ரன்கள் சேர்த்து ஆறாவது முறையாக உலகக் கோப்பை தொடரை வென்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார்.

இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “ தொடர்ந்து எல்லா போட்டிகளையும் வென்றால் வீரர்களுக்கு அதிகப்படியான தன்னம்பிக்கை ஏற்படும். அதுவே வீழ்ச்சிக்கு துவக்கமாக இருக்கும். இந்திய அணி ரசிகர்கள் எதிரணி வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது பாராட்டுவதில்லை. டிராவிஸ் ஹெட் சதமடித்த போது அவர்கள் எழுந்து நின்று கைதட்டவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

சதத்தை நெருங்கும் கே.எல்.ராகுல்.. டிராவை நோக்கி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments