பாகிஸ்தான் அணியைக் காப்பாற்றிய இரண்டு வீரர்கள்… இறுதியில் கோட்டை விட்ட இந்தியா!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (15:25 IST)
இன்று மதியம் தொடங்கிய இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வென்றதை அடுத்து அவர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இன்னும் களமிறங்கிய விளையாடி வருகிறது.

முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீச அந்த ஓவரில் ஒர் ரன் மட்டும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது ஓவரை வீச வந்த இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் எல்பிடபுள்யு முறையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். பின்ன நான்காவது ஓவரில் அவர் முகமது ரிஸ்வானையும் அவுட்டாக்கினார்.

பின்னர் நிலைத்து நின்று ஆடிய பாகிஸ்தான் அணியில் இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி 51 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த ஹைதர் அலி மற்றும் சதாப் கான் ஆகியோரும் அடுத்தடுத்து அவ்ட் ஆக அந்த அணியின் ஷான் மசூத் மட்டும் நிலைத்து நின்று அரைசதமடித்தார். இதனால் அந்த அணி இறுதியில் 8 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் சேர்த்தது.

தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணியை இப்திகார் மற்றும் ஷான் மசூத் ஆகிய இருவர் மட்டும் நிலைத்து நின்று விளையாடி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர். அதே போல பாகிஸ்தான் அணியின் டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments