Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அக்தர் ஓடிவந்து த்ரோ செய்வார்”… சேவாக்கின் சர்ச்சைக் கருத்து!

Webdunia
சனி, 21 மே 2022 (16:35 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் குறித்து சேவாக் சொன்ன கருத்து கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான சேவாக் தன் கிரிக்கெட் காலத்தில் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். ஆனால் இப்போது அவர் சொல்லும் பல கருத்துகள் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்குகின்றன. அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஓடிவந்து த்ரோ செய்வார். அவர் கை எங்கு மடங்குகிறது என்று தெரியாததால் அவர் பந்தைக் கணிப்பது கடினம் என்று கூறினார். இந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சேவாக்கின் இந்த கருத்துக்குப் பதிலளித்த அக்தர் “சேவாக் என் நண்பர்தான். அவர் விளையாட்டாக சொன்னாரா இல்லை சீரியஸாக சொன்னாரா என்று தெரியவில்லை. அவருக்கு ஐசிசி யைவிட அதிகமாக தெரியுமா. தெரிந்தால் சொல்லலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments