Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து ஓபன்: இந்தியாவின் சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (23:28 IST)
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து உலகின் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
 
தாய்லாந்து ஓபன் - 2022 மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில், அரையிறுதிக்கான ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி சிந்து, உலக சாம்பியனான ஜப்பானின் அகேனே யமாகுச்சியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
 
இந்த காலிறுதிப் போட்டியில், 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீராங்கனையை தோற்கடித்தார். கடந்த மாதம் நடைபெற்ற ஆசியா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் யமகுச்சியிடம் இந்திய வீராங்கனை தோல்வியடைந்தார்.
 
சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 7ம் நிலை வீராங்கனையான சிந்து, உலகின் 4ம் நிலை வீராங்கனை, டோக்கியோ 2020 சாம்பியனான சீனாவின் சென் யூ ஃபீயை எதிர்கொள்கிறார்.
 
தாய்லாந்து ஓபனில் களத்தில் உள்ள ஒரே இந்திய வீராங்கனை சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. சாய்னா நேவால், எச்.எஸ் பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே வெளியேறி விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments