“ஆஸ்திரேலியா தொடரில் பிசிசிஐ தவறு செய்துவிட்டது…”- சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் காரணம்!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (14:15 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்க உள்ளது. செப்டம்பர் 22, 24, 27 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வளிக்கப்பட்டு, கே எல் ராகுல் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடக்கும் முக்கியமான தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா “இந்த தொடர் மிகவும் முக்கியமானது. இந்த தொடரில் வீரர்கள் ஒற்றுமையோடு விளையாடி இந்திய அணியின் பலத்தைக் காட்டியிருக்க வேண்டும். இந்த தொடரின் மூலமாகவே வலுவான ப்ளேயிங் லெவனைக் கட்டமைத்திருக்க வேண்டும்.  ஆனால் அதை செய்யாமல் தவறவிட்டுள்ளது பிசிசிஐ. சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்திருக்கும் முடிவு தவறானது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments