தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

vinoth
செவ்வாய், 25 மார்ச் 2025 (08:52 IST)
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அபாரமாக விளையாடி, தலா 72 மற்றும் 75 ரன்கள் எடுத்தனர்.

இதனை அடுத்து, 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுடோஷ் சர்மா அபாரமாக விளையாடி 62 ரன்கள் சேர்த்து போட்டியை லக்னோ அணியிடம் இருந்து தட்டிப் பறித்தார்.

இந்த போட்டியின் இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட மோஹித் ஷர்மாவின் ஸ்டம்பிங் ஒன்றை ரிஷப் பண்ட் மிஸ் செய்தார். அதை அவர் சரியாக செய்திருந்தால் போட்டியை டெல்லி வென்றிருக்கும். ரிஷப் பண்ட் அந்த ஸ்டம்பிங்கை மிஸ் செய்ததை கேலரியில் இருந்த அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்கா முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இதை வைத்து தற்போது நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தபடி மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments