நான் எதை தவறவிட்டேன்… இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டி குறித்து சச்சின் ஜாலி ட்வீட்!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (09:43 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இரு அணிகளும் விக்கெட்களை மளமளவென இழந்து தடுமாறி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய பந்துவீச்சில் சுருண்டது.

அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 153 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக இந்திய வீரர் கோலி 46 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் மளமளவென விக்கெட்கள் இழந்து 153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் மீண்டும் தென்னாப்பிரிக்க அணி பேட் செய்ய வந்து 62 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்தது. இப்படி ஒரே நாளில் 23 விக்கெட்கள் விழுந்தன.

இந்நிலையில் இந்த முதல் நாள் ஆட்டம் குறித்து ட்வீட் செய்துள்ள சச்சின் “நான் விமானத்தில் ஏறும் போது தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. அதன் பின்னர் நான் விமானத்தில் இருந்து இறங்கும் போது அவர்கள் 3 விக்கெட்டில் இருந்தார்கள். இடையில் நான் எதை தவறவிட்டேன் என சொல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் கப் அடிச்சே ஆகணும்! மனதை கல்லாக்கி சிஎஸ்கே எடுத்த முடிவு! முக்கிய வீரர்கள் விடுவிப்பு?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

11 ஆண்டுகளுக்குப் பிறகு பிக்பாஷ் தொடரில் களமிறங்கும் மிட்செல் ஸ்டார்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments