சச்சின் டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (10:44 IST)
சச்சின் டெண்டுல்கர் சில காயங்களின் பிரச்சனைகளால், அவதிபட்டு வந்த நிலையில் தற்போது  தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.


 
கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றதை தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்ட சச்சின், இந்தியாவில் விளையாட்டுத் துறை மேம்படுத்துதல் உட்பட பல சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.

இந்நிலையில், சில காயங்களின் பிரச்சனைகளால், அவதிபட்டு வந்த சச்சின்,  தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதுகுறித்து சச்சின் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “ஓய்வு பெற்ற பிறகும் சில காயங்கள் பிரச்சனைகளாக உருவெடுத்தது, ஆதலால், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஒய்வு எடுத்து வருவகிறேன். மிக விரைவில் மீண்டு வந்து எனக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1989-ம் ஆண்டு கிரிக்கெட் கிரிக்கெட்டில் கால் பதித்து பல உலக சாதனைகளை நிகழ்த்திய டெண்டுல்கர். 2013-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி கிரிக்கெட்டிலிருந்த ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments