Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் உருவாக்கிய ஐபிஎல் 2022 அணி… யார் யாருக்கு இடம்?

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:22 IST)
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய டி 20 கிரிக்கெட் லீக் தொடராக இருந்து வருகிறது. இதில் கிடைக்கும் பணம் பல வீரர்களுக்கு அவர்களின் ஆண்டு ஊதியத்தை விட அதிகமாக இருக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிட் பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் இந்தியாவில் முழு ஐபிஎல் தொடரும் நடந்தது. இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது. அறிமுகமான முதல் சீசனிலேயே அந்த அணி கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்த சீசனில் பல அணிகளை சேர்ந்த வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் தன்னுடைய கனவு ஐபிஎல் அணியை சச்சின் உருவாக்கியுள்ளார். அந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமித்துள்ளார். அணியில் உள்ள வீரர்களாக  ஷிகார் தவான், ஜோஸ் பட்லர், கே எல் ராகுல்,டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டன்,  தினேஷ் கார்த்தி, ரஷீத் கான், முகமது ஷமி, பூம்ரா, சஹால் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments