Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்போது இருக்கும் விதிகள் இருந்திருந்தால்… நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சச்சின் &கங்குலி!

இப்போது இருக்கும் விதிகள் இருந்திருந்தால்… நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சச்சின் &கங்குலி!
, புதன், 13 மே 2020 (07:32 IST)
ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோடிகள் பட்டியலில் சச்சின் மற்றும் கங்குலி ஜோடி முதல் இடத்தில் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தனது 'டுவிட்டர்' பக்கத்தில் இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின்-கங்குலி என அறிவித்துள்ளது. இந்த ஜோடி ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து 8,227 ரன்கள் (சராசரி 47.55) எடுத்தனர். இது குறித்து சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நமது சிறந்த தருணங்களை இது நினைவுபடுத்துகிறது தாதா. நாம் விளையாடிய போது இப்போது இருக்கும் விதிகள் (உள் வட்டத்தில் நான்கு பீல்டர்கள் மற்றும் 2 புதிய பந்துகள்) இருந்திருந்தால் நாம் மேலும் எவ்வ/லவு ரன்கள் சேர்த்திருப்போம்?’எனக் கேட்க, அதற்கு தாதா ’ எப்படியும் 4,000 ரன்கள் இன்னும் அதிகமாக எடுத்திருப்போம். முதல் ஓவரில் இருந்தே 'கவர் டிரைவ்' அடித்து பந்துகள் பவுண்டரிக்கு பறப்பது போல தெரிகிறது. 50 ஓவர்களும் இப்படித் தான் இருந்திருக்கும்’ எனக் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்கள் இல்லாவிட்டாலும் விளையாடனும் - பிரபல கிரிக்கெட் வீரர்