அணியில் நான் செய்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை… சி எஸ் கே அணியின் புதிய கேப்டன் ருத்துராஜ்!

vinoth
வெள்ளி, 22 மார்ச் 2024 (07:26 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்நிலையில் நேற்று மாலை சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு கடந்த 2008 முதலாகவே எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்து வந்த நிலையில் இடையில் ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டு, அவரால் அணியின் பளுவை சுமக்க முடியாமல் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

இதையடுத்து இந்த ஆண்டு ருத்துராஜுக்கு பொறுப்பு கைமாற்றப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பேற்றுள்ளது குறித்து பேசியுள்ள ருத்துராஜ் “சிறப்பாக உணர்கிறேன். சி எஸ் கே பொறுப்பேற்று இருப்பது தனிச்சிறப்புகொண்டது. ஆனால் இது மிகப்பெரிய பொறுப்பு. ஏனென்றால் எங்களிடம் இருக்கும் ப்ளேயர்களை நினைத்து மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்.

அனைவருமே நல்ல அனுபவத்தைக் கொண்டவர்கள். அதனால் நான் செய்ய வேண்டியது பெரிதாக எதுவும் இருக்காது. அணியில் தோனி, ஜட்டு, அஜிங்க்யே ரஹானே ஆகியோர் இருக்கிறார்கள். அதனால் கவலைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த தொடரை அனுபவித்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் நிச்சயம் உண்டு.. ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு..!

ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

45 வயதில் தோனி என்னத்தை சாதிக்க போகிறார்? ஐபிஎல் தொடரில் நீடிப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கமெண்ட்..!

நாங்கள் எல்லாம் விஐபி.. எங்களுக்கு ஐபிஎல் பார்க்க விஐபி ஓசி டிக்கெட் வேண்டும்: எம்.எல்.ஏக்கள் கோரிக்கை..!

இனிமேல் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது சிறுவன் அல்ல.. இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி பெற்றுவிட்டார்...!

அடுத்த கட்டுரையில்
Show comments