Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் விலகலால் ஸ்ரேயாஸ் ஐயருக்குக் கிடைத்த கௌரவம்!

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2024 (07:13 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்நிலையில் நேற்று மாலை சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு கடந்த 2008 முதலாகவே எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்து வந்த நிலையில் இடையில் ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டு, அவரால் அணியின் பளுவை சுமக்க முடியாமல் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

அதன் பின்னர் அணிக்கு மீண்டும் தலைமையேற்ற தோனி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று தந்தார். இந்நிலையில் இப்போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதால் ஐபிஎல் தொடரில் மிகவும் அனுபவம் மிக்க கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மாறியுள்ளார். அவர் 55 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மற்ற வீரர்கள் அனைவரும் அவரை விட அனுபவம் குறைந்த இளம் கேப்டன்களாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments