Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இந்திய அணிக்கு அந்த பயம் கொஞ்சம் இருக்கும்..” நியுசிலாந்து முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:43 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 9 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் நாளை நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்து அணியை முதல் அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது.

கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி அரையிறுதி போட்டிகளோடு தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் இந்த முறை கண்டிப்பாக அந்த சோகம் தொடராது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் நாளை நடக்க உள்ள போட்டி குறித்து பேசியுள்ள நியுசிலாந்து  முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் “இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நியுசிலாந்துக்கு எதிராக விளையாடும் போது, கடந்த உலகக் கோப்பையை நினைத்து கொஞ்சம் பயமாக இருக்கும். நியுசிலாந்து அணியை பொறுத்தவரை முதல் மூன்று விக்கெட்களை முதல் 10 ஓவர்களுக்குள் வீழ்த்தினால் அது கூடுதல் பலமாக அமையும். அதே போல பேட்டிங்கில் முதல் 10 ஓவர்களில் விக்கெட்டை இழக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments