Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து விளையாடியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்..

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (17:47 IST)
பயிற்சியில் கால் பந்து விளையாடியபோது ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரோர் பேர்ன்ஸ் நான்கு மாதம் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் தென் ஆஃப்ரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது போட்டி நடைபெற்ற நிலையில், அதற்கான வார்ம் அப் பயிற்சியில் ஈடுபட்ட போது, கிரிக்கெட் வீரர்கள் கால் பந்து விளையாடினர்.

அப்பயிற்சியின் போது இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரும் தொடக்க ஆட்டக்காருமான ரோரி ஜோசஃப் பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், நான்கு மாதங்களுக்கு ஓய்வு தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ரோரி பேர்ன்ஸ் இலங்கை சுற்றுப்பயணத்தை தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments