Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து விளையாடியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்..

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (17:47 IST)
பயிற்சியில் கால் பந்து விளையாடியபோது ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரோர் பேர்ன்ஸ் நான்கு மாதம் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் தென் ஆஃப்ரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது போட்டி நடைபெற்ற நிலையில், அதற்கான வார்ம் அப் பயிற்சியில் ஈடுபட்ட போது, கிரிக்கெட் வீரர்கள் கால் பந்து விளையாடினர்.

அப்பயிற்சியின் போது இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரும் தொடக்க ஆட்டக்காருமான ரோரி ஜோசஃப் பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், நான்கு மாதங்களுக்கு ஓய்வு தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ரோரி பேர்ன்ஸ் இலங்கை சுற்றுப்பயணத்தை தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments