Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

vinoth
வெள்ளி, 28 மார்ச் 2025 (08:39 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடியது. அதில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அந்த தொடரில் மோசமாக விளையாடினார் ரோஹித் ஷர்மா. இதனால் அவர் இனிமேல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற மாட்டார் எனவும், டெஸ்ட் கேப்டன்சி அவரிடம் இருந்து பும்ராவுக்கு கைமாற்றப்படும் எனவும் தகவல் பரவியது.

இந்நிலையில்  ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ரோஹித் ஷர்மாவே அந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்தட்டும் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments