Publish Date: Wed, 06 Sep 2023 (13:43 IST)
Updated Date: Wed, 06 Sep 2023 (14:18 IST)
50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்த முறை அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் தொடங்க நிலையில் இந்த முறை இந்தியாவில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதால் இந்திய அணிக்குக் கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத சூழலில் இந்த முறை அதற்காகக் கடுமையாக போராடுவோம் என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.
மேலும் அணித் தேர்வுக் குறித்து பேசியுள்ள அவர் “இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என சரியான விகிதத்தில் அணித்தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் ஃபார்ம் மிகவும் முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.