Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே ஒரு தோல்வி போதும்… நான் மோசமான கேப்டனாகி விடுவேன் – ரோஹித் ஷர்மா கருத்து!

Advertiesment
ஒரே ஒரு தோல்வி போதும்… நான் மோசமான கேப்டனாகி விடுவேன் – ரோஹித் ஷர்மா கருத்து!
, வியாழன், 2 நவம்பர் 2023 (11:00 IST)
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பை தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அனைத்து போட்டிகளிலும் சில பல சிக்ஸர்களை விளாசி வரும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக வலம் வந்துகொண்டிருக்கிறது இந்திய அணி. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பதின் அழுத்தம் குறித்து பேசியுள்ள ரோஹித் ஷர்மா “சில நேரங்களில் எல்லாமே நமக்கு சாதமாக நடக்கும். சில நேரங்களில் நடக்காமலும் போகலாம்.  எல்லாவற்றுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஒரே ஒரு தோல்வி வந்தால் நான் மோசமான கேப்டனாகிவிடுவேன். அணிக்கு தேவையானதை நாம் செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இன்று இந்திய அணி இலங்கையை தங்களது ஏழாவது போட்டியில் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தகக்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மாற்றம்.. வான வேடிக்கை மட்டும்!