Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா… காரணம் இதுதான்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:40 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றியைப் பெற்றது.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கியுள்ளன. நேற்றைய போட்டியில் பலம் மிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பாக கோலி அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 

இந்த போட்டியில் கடைசி வரை பரபரப்பாக சென்ற நிலையில் இறுதி ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கைக்கு வந்த மிக எளிமையான கேட்ச் ஒன்றை தவறவிட்டார். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ரோஹித் ஷர்மா கடுப்பாகினார். இவ்வளவு கோபத்தோடு ரோஹித் ஷர்மா இதுவரை களத்தில் செயல்பட்டதில்லை. அந்த கேட்ச்சை அர்ஷ்தீப் பிடித்திருந்தால் ஒருவேளை போட்டியின் முடிவு இந்தியாவுக்கு சாதகமாக கூட இருந்திருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!

தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வி… தோனி கேப்டனாகியும் ‘எந்த பயனும் இல்ல’!

அடுத்த கட்டுரையில்
Show comments