Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா!

vinoth
வியாழன், 8 மே 2025 (06:38 IST)
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்தது. அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார்.

இதையடுத்து அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கான அணிக்கு அவர் கேப்டனாக இருக்கமாட்டார் என்றும் ஒரு வீரராக மட்டுமே இருப்பார் என்றும் தகவல்கள் பரவின. ஆனால் திடீரென நேற்றிரவு ரோஹித் ஷர்மா தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவேன் என அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மா 4,301 ரன்கள் சேர்த்துள்ளார். 12 சதங்களும் 18 அரைசதங்களும் சேர்த்துள்ளார். ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் அந்தளவுக்கு தன் திறமையை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments