Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா… ஏமாற்றிய ராகுல் & ரோஹித் ஷர்மா!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (10:29 IST)
இந்திய அணி முதல் இன்னிங்ஸை தற்போது ஆடிவரும் நிலையில் முதல் விக்கெட்டை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிய ஆஸி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் காவாஜா 81 மற்றும் அலெக்ஸ் ஹேரியின் 72 ரன்கள் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 263 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 21 ரன்கள் சேர்த்து நேற்றைய ஆட்டத்தை முடித்தது. இன்று தொடர்ந்து ஆடிவரும் நிலையில் முதல் விக்கெட்டாக கே எல் ராகுல் 17 ரன்களுக்கும் அடுத்த விக்கெட்டாக ரோஹித் ஷர்மா 32 ரன்களுக்கும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments