Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகளுக்குப் பின் சதம் அடித்த ரோஹித் சர்மா!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:22 IST)
ஒருநாள் போட்டிகளில் 3 ஆண்டுகளுக்குப் பின் இன்று ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக உள்ளார்.

கடந்த  2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடந்த போட்டியின் போதுதான் அவர் சதம் அடித்திருந்தார்.

அதன் பின்னர், அவர் விளையாடி பல போட்டிகளீல் சொற்ப ரன் கள் மட்டுமே அடித்திருந்தார். சமீபத்தில், இந்தியய டி-20 போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக  நியமிக்கப்பட்டார்.

எனவே விரைவில் ரோஹித் சர்மா கேப்டன் பதவி பறிபோகுமா ? என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், இன்று நியூசிலாந்திற்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில், ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இப்போட்டியில் இந்திய அணி 385 ரன் கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments