Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடினமான சூழலில் கோலி போன்றவர்கள் கற்றுத் தருவார்கள்.. ரிஷப் பண்ட்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (15:28 IST)
இந்திய அணியில் ஆறாவது வீரராக ரிஷப் பண்ட் இறங்குவாரா இல்லை கோலி இறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆடும் லெவனில் ஆறாவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்பதுதான் இந்திய அணியில் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக உற்சாகத்தோடு காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் கோலியுடன் இணைந்து விளையாடிய இன்னிங்ஸைக் குறிப்பிட்டு “கஷ்டமான சூழலில் கோலி போன்ற மூத்த வீரருடன் விளையாடுவது உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கும். நான் அந்த போட்டியில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசியதை நினைத்துக் கொள்கிறேன்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எப்போதும் விதிவிலக்கானது. மக்கள் கூட்டம் ரசிகர்களின் உணர்ச்சி என தேசிய கீதம் பாடும்போதே எனக்கு மயிர்கூச்செரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments