Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

vinoth

, புதன், 15 மே 2024 (14:23 IST)
கடந்த வாரம் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதால் அணி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்த விதி ஐபிஎல் தொடரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் ஸ்லோ ஓவர் ரேட்டில் பந்துவீசினால் கடைசி ஓவர்களில் நான்கு பீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்துக்கு வெளியே நிற்கவைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் டெல்லி அணி சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடாதது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து அந்த போட்டியை தோற்றனர்.

இந்நிலையில் இந்த தடை பற்றி பேசியுள்ள ரிஷப் பண்ட் “நான் அந்த போட்டியில் விளையாடி இருந்தால் எங்களுக்கு ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு எளிதாக அமைந்திருக்கும்” எனக் கூறியுள்ளார். ஆனால் இப்போது அவர்கள் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு மற்ற போட்டிகளின் முடிவில் ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!