Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த ரிஷப் பண்ட்… இதுதான் காரணமாம்!

vinoth
சனி, 18 ஜனவரி 2025 (07:02 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் ஓய்வு கிடைக்கும் போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரிஷப் பண்ட் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிக் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். அவர் வரும் 23 ஆம் தேதி நடக்கவுள்ள சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார். இந்த போட்டியில் அவருக்கு டெல்லி அணியை வழிநடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்ட போதும் அவர் அதை நிராகரித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் “ஓரிரு போட்டிகள் மட்டுமே விளையாட அணிக்குள் வரும் தாம் கேப்டன் பதவியை ஏற்றால் அது அணி வீரர்களுக்கு நியாயம் சேர்க்காது” எனக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments