Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச வீரரை பாடி ஷேமிங் செய்தாரா ரிஷப் பண்ட்?... கிளம்பிய சர்ச்சை!

vinoth
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:38 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது கிரிக்கெட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற்று வரும் நிலையில், மழை காரணமாக முதல் மூன்று நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று  நான்காவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி மளமளவென விக்கெட்களை இழந்து 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதையடுத்து அதிரடியாக இந்திய அணி 285 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் பங்களதேஷ் 3 விக்கெட்களை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களை இந்திய பேட்ஸ்மேன்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வங்கதேச அணி பேட் செய்யும் போது அந்த அணியின் வீரர் மொமினுல் குறித்து ரிஷப் பண்ட் அடித்த கமெண்ட் சர்ச்சையைக் கிளப்பியது. மொமினுல் உயரம் குறைவான வீரர் என்பதால் அவர் தடுப்பாட்டத்தில் ஈடுபடும்போது பந்து தலையில் பட்டாலும் எல் பி டபுள் யு முறையில் விக்கெட் கொடுக்கவேண்டும் என கீப்பிங் நின்ற ரிஷப் பண்ட் கூறினார். அவரின் இந்த கமெண்ட் தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸை மட்டும்தான் வென்றீர்கள்… உங்களால் ஏமாற்றம் அடைந்தேன் – பாகிஸ்தான் அணியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து வெளியேற்றம்.. மீண்டும் மாற்றப்படுகிறாரா பயிற்சியாளர்?

அடுத்தடுத்து இரண்டு போட்டிகள்… இந்திய அணியில் இரு வீரர்களுக்கு தசைபிடிப்பு!

மகளிர் பிரீமியர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி தோல்வி..!

77 ரன்கள் அடித்த வங்கதேச கேப்டன் ஷாண்டோ அவுட்.. நியூசிலாந்து அபார பந்துவீச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments