Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஐபிஎல்லில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட வீரர்? அணி? – தோற்றும் வென்ற ஆர்சிபி!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (10:48 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த சீசனில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஐபிஎல் அணி மற்றும் வீரர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

2022 ஐபிஎல் சீசன் கடந்த ஏப்ரலில் தொடங்கி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டிகளில் இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும், புதிய அணியான குஜராத் டைட்டன்ஸும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல்லில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட வீரர்கள் குறித்த தரவரிசையில் அதிகம் ட்வீட் செய்யப்பட்டு ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சென்னை அணி கேப்டன் தோனியும், மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

அதுபோல அதிகம் ட்வீட் செய்யப்பட்ட அணிகளில் ரசிகர்கள் மனதை வென்ற ஆர்சிபி அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments