Publish Date: Thu, 12 Aug 2021 (10:44 IST)
Updated Date: Thu, 12 Aug 2021 (10:45 IST)
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில ஆண்டுகள் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கோலியின் கைப்பாவையாகதான் அவர் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் டி 20 உலகக்கோப்பையோடு அவரின் பதவிக்காலம் முடிகிறது.
இதை அவர் நீட்டிக்க விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விடைபெற விரும்புவதாக முன்னணி நாளேடு ஒன்று செய்தி வெளிப்பட்டுள்ளது.