Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 அணிக்கு ரோஹித், கோலி வேண்டாம்… ரவி சாஸ்திரி தடாலடி கருத்து!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (08:03 IST)
சமீபத்தில் நடந்த டி 20 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய டி 20 அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. அணியை ஹர்திக் பாண்ட்யாதான் வழிநடத்தி வருகிறார். இதனால் விரைவில் இந்திய டி 20 அணிக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

இந்நிலையில் இப்போது இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டி 20 அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி அவர் “இந்திய டி 20 அணிக்கு இனிமேல் கோலி, ரோஹித் ஷர்மா தேவையில்லை. அவர்களின் ஆற்றலை நாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களை டி 20 அணியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments