Publish Date: Fri, 01 Jul 2016 (17:00 IST)
Updated Date: Fri, 01 Jul 2016 (17:04 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பின் ஊடகப் பிரதிநிதி பதவியை ரவி சாஸ்திரி ராஜினாமா செய்தார்.
இந்திய முன்னார் கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பின் ஊடகப் பிரதிநிதியாக இருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்த்ரியும் காத்திருந்தார்.
ஆனால் அந்த பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். அதற்கு ரவி சாஸ்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு கவுதம் கம்பீர் கூட பதலிக்கு ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணிக்கு என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் தற்போது ரவி சாஸ்திரி ஐசிசியில் அவர் வகித்த பதவியை ராஜினாமா செய்தார்.