Publish Date: Sat, 10 Jun 2023 (12:45 IST)
Updated Date: Sat, 10 Jun 2023 (13:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேஎ நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் இந்திய அணியில் அஸ்வினை எடுக்காதது மிகப்பெரிய குறை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அஸ்வினை எடுக்காதது பற்றி பேசிய சுனில் கவாஸ்கர் “அஸ்வினை எடுக்காததால் ஒரு துருப்புச் சீட்டை இந்தியா இழந்துள்ளது. அவரை போல நம்பர் 1 பேட்ஸ்மேன் அணியில் இருக்கும் போது ஆடுகளத்தின் தன்மையை பற்றி நாம் பார்க்க கூடாது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் போட்டியில் அஸ்வின் சப்ஸ்ட்டியூட் வீரராக வந்து களத்தில் பீல்டிங் செய்தார். இதைப் பகிர்ந்து ரசிகர்கள் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.