தோனி கேப்டன்சியில விளையாடுறது கனவு… இளம் வீரரின் ஆசை!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (11:31 IST)
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஐபிஎல் தொடரில் கவனம் ஈர்த்த வீரராக உருவாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தோனிக்கு பதில் ஜடேஜா கேப்டனாக தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல வீரர்களும் ஜடேஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. மேலும் தோனியை பற்றிய தங்கள் மேலான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தற்போது தோனியைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் ‘ஒவ்வொரு வீரருக்கும் தோனியின் தலைமையில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும்’ எனக் கூறியுள்ளார். இது வரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்த ரஷீத் கான் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்குமா? நடக்காதா? பாகிஸ்தான் பிரதமர் சொன்னது என்ன?

இந்தியாவுடன் டி20 உலக கோப்பை!.. பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிப்பு?..

இந்த 3 நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் இந்தியாவுடன் விளையாடுவோம்: பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில்

118 ரன்களுக்கு 7 விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா.. சூர்யகுமார் யாதவ் புண்ணியத்தில் வெற்றி..!

வைபவ் சூர்யவன்ஷி இந்திய சீனியர் அணியில் இடம்பெறாதது ஏன்? இந்த 2 காரணங்கள் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments