Publish Date: Thu, 01 Mar 2018 (17:38 IST)
Updated Date: Thu, 01 Mar 2018 (18:00 IST)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான். சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்க்கும் முதல் இளம்வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் இளம்வீரர் 19-வயதான லெக் ஸ்பின்னர் ரஷீத் கான். இவர் ஐசிசியால் சிறந்த துணை வீரர் விருதும் பெற்றவர்.
இவர் சென்ற வருடம் ஒருநாள் போட்டியில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் வீழ்த்திய வீக்கெட்களை சராசரியாக கணக்கிட்டால் போட்டிக்கு 3.8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவே 2017 ஆம் ஆண்டில் ஒரு பவுலர் அதிகமான பெற்ற சராசரி ஆகும்.
இந்நிலையில் தற்போதைய ஆப்கானிஸ்தான் கேப்டன் ‘அஸ்கர் ஸ்டானிக்சை’ மருத்துவ ஒய்வில் உள்ளதால், அப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘ரஷீத் கானை’ கேப்டனாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்க்கும் முதல் இளம் வீரர் என்ற பெயர் பெற்றுள்ளார்.