Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி எப்பவுமே “ஃபினிஷர்” தான்..ரெய்னா புகழாரம்

Arun Prasath
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (15:00 IST)
தோனி இப்பொழுதும் பெஸ்ட் ஃபினிஷர் தான் என புகழந்து கூறியுள்ளார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் நான்காவது வரிசை வீரருக்கான இடம் பற்றி பல வருடங்களாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். ஆனால் அவரது ஆட்டம் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் தான் ஆட தயாராக இருப்பதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ”நான்காவது வரிசை வீரருக்கான இடம் பற்றி பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தற்போது நான் இறங்கி விளையாட தயாராக இருக்கிறேன். ரிஷப் பண்ட் விளையாடுகையில் குழப்பமடைந்து வருகிறார்” என்று கூறுகிறார்.

மேலும், கிரிக்கெட் ஒரு மனரீதியான விளையாட்டு, அதில் தோனி சரியான உடல் தகுதியுடன் இருக்கிறார். ஆட்டத்தை சரியாக எப்போதும் முடிப்பதில் அவர் மிக சிறந்த ஃபினிஷர் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments