தொடர் தோல்வி எதிரொலி… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை இழக்கும் ரமிஸ் ராஜா?

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (08:29 IST)
ஒரு வருடத்துக்குள்ளாகவே ரமீஸ் ராஜாவை பதவியை விட்டு நீக்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததன் பின்னணியில் இந்த தகவல்கள் வந்துள்ளன. செவ்வாயன்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க தொடரை கைப்பற்றியது. சொந்த மண்ணில் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது இதுவே முதல் முறையாகும்.

இந்த தோல்வியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அவரின் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் அப்போது மூன்று ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டு இருந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments