Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்மத்த கக்கிட்டான்… ஆர் சி பி ஆண்கள் அணியைக் கலாய்த்து பதிவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!

வன்மத்த கக்கிட்டான்… ஆர் சி பி ஆண்கள் அணியைக் கலாய்த்து பதிவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!

vinoth

, திங்கள், 18 மார்ச் 2024 (07:30 IST)
மகளிர் பிரிமியர் லீக் (WPL 2024) போட்டியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதி போட்டியில் எதிர்கொண்ட நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையைத் தழுவியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்தாலும் 7வது ஓவரில் விக்கெட்டில் சறுக்க ஆரம்பித்தது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 18வது ஓவரிலேயே 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன் பிறகு ஆடிய பெங்களுர் அணி நிதானமாக விளையாடி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதனையடுத்து கோப்பையை வென்ற ஆர் சி பி பெண்கள் அணிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு மீமை பகிர்ந்து ஆர் சி பி பெண்கள் அணியைப் பாராட்டியும், ஆண்கள் அணியை ட்ரோல் செய்யும்  விதமாக ஒரு பதிவிட்டுள்ளனர். ஆர் சி பி ஆண்கள் 17 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹர்திக் பாண்ட்யாவை அணியில் இருக்க சொல்லி நாங்கள் கேட்கவில்லை… குஜராத் அணி பயிற்சியாளர் நெஹ்ரா!