ரிஷப் பண்ட் யுவ்ராஜ் போல ஆதிக்கம் செலுத்தும் வீரர்! பாராட்டிய மூத்த வீரர்!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (10:45 IST)
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் யுவ்ராஜ் போல போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருக்கிறார் என ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட ரிஷப் பண்ட் அடுத்து தோனியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் தனது மோசமான பார்மால் தனது இடத்தை தக்கவைக்க முடியாமல் போராடி வருகிறார். ஆனாலும் இன்னும் அவர் மேலான நம்பிக்கை மீதமுள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள, கிரிக்கெட் வீரர்கள் சக கிரிக்கெட் வீரர்களோடு இன்ஸ்டாகிராமில் உரையாடி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா இன்ஸ்டாகிராமில் சக இந்திய வீரர் சகாலுடன் உரையாடிய ரெய்னா ’ ரிஷப் பன்ட் மிகத் திறமையான கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடும் போது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ், சேவக் போல போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவார். 'பிளிக் ஷாட்' அடிக்கும் போது டிராவிட் ஆட்டத்தை நினைவுபடுத்துவார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

அடுத்த கட்டுரையில்
Show comments