Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

vinoth
சனி, 14 டிசம்பர் 2024 (10:22 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரு அணிகளிலுமே மாற்றம் நடந்துள்ளது. இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸி அணியில் ஸ்காட் போலண்ட் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். அதன்படி பேட் செய்த ஆஸி அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்தபோது மழைக் குறுக்கிட்டதால் சீக்கிரமாகவே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து மழைப் பெய்வதால் தற்போது ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments