Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது இதுவே முதல் முறை... ரச்சின் ரவீந்தரா பூரிப்பு

vinoth
சனி, 23 மார்ச் 2024 (14:39 IST)
17 ஆவது ஐபில் சீசன்  நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்  தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதனால் இந்த போட்டி ரசிகர்களால் பெரியளவில் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி முதலில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து 173 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அணியில் அனைத்து  வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து  எளிதாக இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் சென்னை அணிக்காக முதல் முறையாகக் களமிறங்கிய நியுசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்தரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரவீந்தரா 15 பந்துகளில் 35 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். இதனால் சி எஸ்கே அணி இலக்கை எளிதாக துரத்தியது.

போட்டி முடிந்ததும் பேசிய ரவீந்தரா ‘நான் விளையாடியதிலேயே சேப்பாக்கம் மைதானம்தான் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட மைதானமாக உள்ளது. இவ்வளவு ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையில் நான் விளையாடுவது இதுவே முதல் முறை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments