Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது இதுவே முதல் முறை... ரச்சின் ரவீந்தரா பூரிப்பு

vinoth
சனி, 23 மார்ச் 2024 (14:39 IST)
17 ஆவது ஐபில் சீசன்  நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்  தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதனால் இந்த போட்டி ரசிகர்களால் பெரியளவில் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி முதலில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து 173 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அணியில் அனைத்து  வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து  எளிதாக இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் சென்னை அணிக்காக முதல் முறையாகக் களமிறங்கிய நியுசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்தரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரவீந்தரா 15 பந்துகளில் 35 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். இதனால் சி எஸ்கே அணி இலக்கை எளிதாக துரத்தியது.

போட்டி முடிந்ததும் பேசிய ரவீந்தரா ‘நான் விளையாடியதிலேயே சேப்பாக்கம் மைதானம்தான் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட மைதானமாக உள்ளது. இவ்வளவு ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையில் நான் விளையாடுவது இதுவே முதல் முறை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments