Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

vinoth
வியாழன், 27 மார்ச் 2025 (08:25 IST)
சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களை விட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான லீக் தொடராக மாறி வருகிறது ஐபிஎல். உலகில் கிரிக்கெட் விளையாடும் (பாகிஸ்தான் தவிர) நாட்டு வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

இந்நிலையில் ஐபிஎல் திருவிழா சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. அதையடுத்து மொத்தம் 13 மைதானங்களில் விறுவிறுப்பாக போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எல்லா போட்டிகளும் அதிக ரன்கள் சேர்க்கும் போட்டிகளாக அமைந்து வருகின்றன. 200 ரன்கள் என்பது தற்போது மிகவும் சாதாரண ஒரு இலக்காக மாறியுள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பவுலரான ரபாடா கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் சமமின்மை குறித்து பேசியுள்ளார். அதில் “இம்பேக்ட் ப்ளேயர் விதி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எல்லா பிட்ச்களும் தட்டையாக அமைக்கப்பட்டு, எல்லா போட்டிகளும் அதிக ரன்கள் சேர்க்கும் ஒன்றாக மாறிவருகின்றன. இப்படியே சென்றா கிரிக்கெட் என்பதை மாற்றும் ‘பேட்டிங்’ என்றுதான் இந்த விளையாட்டுக்குப் பெயர் வைக்க வேண்டி வரும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments