Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரபடா தாக்குதலில் நிலைகுலைந்த இந்திய பேட்டிங் ஆர்டர்!... முதல் நாள் நிலவரம்!

Advertiesment
இந்தியா
, புதன், 27 டிசம்பர் 2023 (06:53 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்று பந்துவீச்சை தென்னாப்பிரிக்க அணி தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.

கேப்டன் ரோகித் சர்மா  ஐந்து ரன்களில் அவுட் ஆக அதனை அடுத்து சுப்மன் கில் இரண்டு ரன்களில் அவுட்டானார். இதனை அடுத்து ஜெயஸ்வால் 17 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட் ஆகினர். நிதானமாக விளையாடிய கோலி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் வரிசையாக விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 208 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்களை இழந்துள்ளது. ராகுல் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்கா சார்பில் கசிகோ ரபாடா அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''எல்லா பக்கமும் பிளாக்'' ...''அப்பா உன்னை மிஸ் செய்கிறேன்''- மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தவான்