Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023; டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி முடிவு

Webdunia
புதன், 17 மே 2023 (19:35 IST)
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2023,  16வது சீசன்  தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில்,  லீக் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

64வது லீக் சுற்று ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி விளையாடுகிறது.

இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் தவான் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளார்.

எனவே முதலில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

பஞ்சாப் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியும்,6 தோல்வியும் பெற்று, 12  புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

இனி வரவுள்ள 2லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றால்தான் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நெருக்கடி உள்ளதால் இன்றைய போட்டியில் ஜெயிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இதுவரை வார்னர் தலைமையிலான டெல்லி அணி 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், 8 தோல்வியும் பெற்று, 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments