நிலை குலைந்த இந்தியா… 39 ரன்களுக்கு 3 விக்கெட்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (17:14 IST)
இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.          
    

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் இன்று ஓவல் டெஸ்ட் சற்று முன்னர் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி சற்று முன்பு வரை 28 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. முன்னதாக சில ஓவர்களுக்கு முன்னர் ரோஹித் ஷர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரன்கள் சேர்க்காமலேயே 5 ஓவர்கள் கடந்த நிலையில் இப்போது ராகுலும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சிறிது நேரம் தாக்குப் பிடித்த இந்திய அணியின் தூண் புஜாரா 31 பந்துகளுக்கு 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார். இப்போது இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து அதல பாதாளத்தில் கிடக்கிறது. ஜடேஜா களமிறக்கப்பட்டுள்ளார். அவராவது கோலியுடன் சேர்ந்து அணியை மீட்பாரா என்ற ஆவல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8.. தெ.ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த இந்தியா..!

40 வயதில் 2வது திருமணம் செய்து கொண்ட ஷிகர் தவான்.. மணமகள் எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா?

இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதியில் மோதினால் அந்த போட்டி எங்கு நடக்கும்? பெரும் குழப்பம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments