Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எச்சில் துப்பாம எப்படி பந்து வீசுறது? – ஆஸ்திரேலிய பவுலர் கேள்வி!

எச்சில் துப்பாம எப்படி பந்து வீசுறது? – ஆஸ்திரேலிய பவுலர் கேள்வி!
, வியாழன், 21 மே 2020 (14:39 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவியதை தொடர்ந்து கிரிக்கெட்டில் பந்தில் எச்சில் தடவுதலை தடை செய்வது சிரமமான காரியம் என ஆஸ்திரேலிய பவுலர் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் அன்றாட செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் கிரிக்கெட்டிலும் ஐசிசி குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வர உள்ளது. எச்சிலின் மூலம் கொரோனா பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் இனி கிரிக்கெட்டில் பந்து வீசும்போது அதில் எச்சிலை தடவ கூடாது என ஐசிசி புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்த உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் “எச்சிலை பந்தில் தேய்த்து வீசுவது என்பது பவுலர்களது நீண்ட நாள் பழக்கம். அதை தடுப்பது மிகவும் கடினம்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் துணை கேப்டனும், பவுலருமான பேட் கம்மின்ஸ் “பந்தி எச்சிலை தடவுவதற்கு தடை விதித்தால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பந்தை தொடர்ந்து பளபளப்பாக வைத்துக் கொள்ள ஏதாவது செயற்கையான பொருளை பயன்படுத்தவாவது அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

WWE குத்துச் சண்டை போட்டியில் யார் அதிகம் சம்பளம் பெறுகிறார்கள் ?