1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதை விட திருப்தி எதுவும் இல்லை… நாளைய போட்டி குறித்து கம்மின்ஸ்!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (13:56 IST)
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.  2003 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் பற்றி பேசிய ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் “ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே சில வீரர்கள் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார்கள். இப்போது இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அதுவும் இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போகிறோம்” எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 1.3 லட்சம் இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது குறித்து பேசியுள்ள அவர் “நாளை எப்படியும் ரசிகர்களின் ஆதரவு ஒருதலை பட்சமாகதான் இருக்க போகிறது. ஆனால் அவர்களை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளைக்கு எங்களின் இலக்கு அதுவாகதான் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments