Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதை விட திருப்தி எதுவும் இல்லை… நாளைய போட்டி குறித்து கம்மின்ஸ்!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (13:56 IST)
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.  2003 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் பற்றி பேசிய ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் “ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே சில வீரர்கள் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார்கள். இப்போது இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அதுவும் இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போகிறோம்” எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 1.3 லட்சம் இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது குறித்து பேசியுள்ள அவர் “நாளை எப்படியும் ரசிகர்களின் ஆதரவு ஒருதலை பட்சமாகதான் இருக்க போகிறது. ஆனால் அவர்களை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளைக்கு எங்களின் இலக்கு அதுவாகதான் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது பெங்களூரு.. படுதோல்வி அடைந்த பஞ்சாப்..!

101க்கு ஆல்-அவுட்.. முக்கியப் போட்டியில் கோட்டை விட்டதா பஞ்சாப்? பெங்களூரு பவுலிங் அபாரம்..!

பவர்ப்ளேயில் ஆர்சிபியின் ஆதிக்கம்.. விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் பஞ்சாப்! RCB vs PBKS Live updates in Tamil

நேரடியாக ஃபைனலுக்கு போவது யார்? டாஸ் வென்ற ஆர்சிபி எடுத்த முடிவு..!

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments